யாழ் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தென்னிலங்கையில் நடந்த துயரம்!!

49

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்அனுரதபுரத்தில் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் முகுந்தன் வயது 29 என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவர் ஆவார் .

அனுரதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றுமாலை (8) ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .



தனது கடமை முடிந்து ஆற்றில் குளிக்கச் சென்ற சமயம் அவர் , நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. சடலம் அனுரதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை அனுரதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.