இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கசிப்பு வழங்கியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியதை தான் வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(09.05.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கைத் தமிழரசுக் கட்சி கசிப்பு வழங்கியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறிய கருத்தை அவர் மீளப்பெற வேண்டும்.
ஒரு காலமும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, மதுபான சாலைகளை திறப்பதற்கும் மக்களுக்கு மதுவை வழங்குவதற்கும் உடந்தையாக இருந்ததில்லை.
அத்துடன், ஒரு காலமும் நாங்கள் பணம் வழங்கி வாக்கு பெற்றதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,