வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான கார் : மூவர் படுகாயம்!!

266

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கெரோலினா தோட்ட பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற ஒரு குழுவினர் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துக்கு வழிவிட முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.