வெசாக் தினத்தை முன்னிட்டு வுவனியாவில் நல்லிணக்தை வலியுறுத்தி இன்று(12) தன்சல் வழங்கப்பட்டது.
வவுனியா, ஏ9 வீதியில் மூன்றுமுறிப்பு பிள்ளையார் ஆலயம் அருகாமையில் வைத்து இந்து மதகுருமார்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், தமிழ் சிவில் அமைப்புக்கள் மற்றும் தமிழ் மக்கள் இணைந்து இதனை வழங்கியிருந்தனர்.
தென்பகுதியில் இருந்து வடக்கிற்கு வரும் பௌத்த சகோதர, சகோதரிகளுக்கு இதன்போது குளிர்பானம், பிஸ்கட் என்பவற்றை வழங்கி தமது நலலிணக்தை வெளிப்படுத்தியிருந்தனர்.