நான் பேராசைக்காரி இல்லை : காஜல் அகர்வால் ஆவேசம்!!

236

Kajal

நடிகை காஜல் அகர்வால் கூடுதல் சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களிடம் கெடுபிடி செய்வதாக செய்திகள் பரவி உள்ளன. தமிழில் காஜல் அகர்வால் நடித்து கடைசியாக ஜில்லா படம் வந்தது. அடுத்து பாலாஜி மோகன் இயக்கும் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. இந்தியிலும் இரண்டு படங்களில் நடிக்கிறார்.

ஜெயம் ரவியை வைத்து சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை அணுகியதாகவும் அவர் 1½ கோடி சம்பளம் கேட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்யாமலேயே திரும்பி விட்டார்கள் என்றனர். மும்பை சென்ற காஜல் அகர்வாலிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அவர் கூறியதாவது:–

நான் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாக வதந்திகள் பரவி இருக்கிறது. ஒரு படத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறோனோ அதற்கு தகுந்த ஊதியத்தை தான் நான் வாங்குகிறேன். சில படங்களில் கதை இருக்காது. ஆனால் அதில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்கின்றனர். அந்த கேரக்டருக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கேட்கிறேன்.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் வாங்குகிறேன். நான் பேராசைக்காரி அல்ல. பெரிய ஹீரோ, பெரிய கம்பெனி படங்கள் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. கதை பிடித்து இருந்தால் ஒப்புக் கொள்கிறேன் என்று அவர் கோபத்துடன் கூறினார்.