வவுனியாவில் காணாமல்போன தந்தையை 50 நாட்களாக தேடும் பிள்ளைகள் : உதவுமாறு கோரிக்கை!!

84

வவுனியாவில் காணாமல் போன தமது தந்தையினை 50 நாட்களுக்கு மேலாக பிள்ளைகள் தேடி வருவதுடன் அவரை கண்டால் உடனடியாக தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வவுனியாவிற்கு செல்வதாக தெரிவித்த நிலையில் காணாமல் போயுள்ளார்.



இது தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே குறித்த நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0743022280 அல்லது 0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.