வவுனியாவில் மாகாணமட்டத்தில் வெற்றிபெற்ற நெசவாளர்களுக்கு கௌரவிப்பு!!

347

Nesavu

தொழில்துறை திணைக்களத்தின் வேப்பங்குள நெசவு நிலையத்தில் பல வருடங்கள் சேவையாற்றி வவுனியா பிரதேசத்திற்கு பல வெற்றிகளை தேடித்தந்தமையை பாராட்டி நேற்று முன்தினம் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த கௌரவிப்பு யசோதரலிங்கம் மல்லிகாவதி (65) என்பவருக்கு மாகாணமட்ட கைத்தொழில் கண்காட்சியில் 2014 இன் சிறந்த
நெசவாளருக்கான விருதையும் சாறி வடிவமைப்பில் மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றமையையும் பாராட்டி இன்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்

புஸ்பராசர ராஜேஸ்வரி (56) 2014 சிறந்த நெசவாளருக்கான விருதையும் சாறி மற்றும் ரவல் வடிவமைப்பில் மாகாணமட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றமையையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இவர் 2012ம் ஆண்டு சிறந்த நெசவாளருக்கான விருதை பெற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது. மாகாணமட்ட கைத்தொழில் கண்காட்சியில் 2014 சிறந்த நெசவு போதனாசிரியருக்கான விருதினையும் வவுனியாவை சேர்ந்த கி.கிருஸ்ணவேணி பெற்றமையையும் பாராட்டி நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.