லொறி மோதி சைக்கிளில் சென்றவர் பரிதாபமாக பலி!!

319

மங்களகம பொலிஸ் பிரிவில் அம்பாறை – கண்டி வீதியில், லொறி ஒன்று சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து நேற்று புதன்கிழமை (14.05) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், மங்களகம பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.

மஹாஓயாவிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற லொறி ஒன்று, அதே திசையில் பயணித்த சைக்கிளில் சென்ற ஒருவர் மீது மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்தில் படுகாயமடைந்த சைக்கிள் சென்றவர் செனரத்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மஹாஓயா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, லொறியின் சாரதி காயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மங்களகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.