தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்து படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்ரி குகராஜாவின்(குகன்) 26 வது நினைவுதினம் வவுனியாவில் இன்று (15.05.2025) அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு அன்னாரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.