பல்கலை மாணவன் உயிரிழப்பு : 10 மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

181

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மாணவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாணவர்களும் இன்று (16.05) நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.