யாழில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

1221

யாழ்ப்பாணம், நீர்வேலியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஊரெழு கிழக்கு சுன்னாகத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞராவார்.

இந்த வியடம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 11 ஆம் திகதி மேற்படி இளைஞன் மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னிருக்கையில் அமர்ந்து பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சென்றுள்ளார்.

இதன்போது நீர்வேலிப் பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மேற்படி இளைஞன் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (19.05) உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை விசாரணை மேற்கொண்ட நிலையில், அறிக்கைகள் கோப்பாய் பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளன.