யானை மீது மோதியதில் ரயில் தடம் புரள்வு!!

638

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த மீனகயா கடுகதி ரயில் காட்டுயானை மீது மோதி தடம் புரண்டுள்ளதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு ரயில் வீதியின் ஹபரணை ரயில் நிலையத்திற்கும் கல்லோயா ரயில் நிலையத்திற்கும் இடையே ஹபரணை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் 20 ஆம் திகதி இன்று

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஹபரனை பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் எட்டு வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள மின்னேரிய அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

காட்டு யானை ரயில் எஞ்சினின் கீழ் பகுதியில் சிக்குண்டதால் தண்டாவாளங்களுக்கு சேதம் ஏற்பட்டதால் எஞ்சின் தடம்புரண்டது.இதனால் கிழக்கு ரயில் வீதியின் மட்டக்களப்பு வரையான ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

ரயில் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக வேண்டி ரயில்வே திணைக்கள ரயில் வீதி பராமரிப்பு பிரிவின் ஊழியர்கள் சேவையில் அமர்த்தப்பட்ட உள்ளதாக கல்ஒயா ரயில் நிலைய உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.