களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.