வவுனியா கனகராயன்குளத்தில் மூழ்கி இளைஞர் மரணம்!!

872

வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் நேற்று (26.05.2025) சாவடைந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று மாலை கனகராயன்குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது குளத்தில் மூழ்கி சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம.ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்