தனது மகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கதறி கதறி அழும் தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தை-மகள் உறவு என்பது எப்போதும் மிகவும் ஆழமாக இருக்கும். ஆண் பிள்ளைகளை விடவும், பெண் பிள்ளைகளிடம் தந்தைக்கு அதிக பிணைப்பு இருக்கும். தந்தைகளின் இளவரசிகளாக மகள்கள் இருப்பார்கள் என்றால் அது மிகை ஆகாது.
இந்நிலையில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.
அப்போது மருத்துவர் ஊசியை குழந்தையில் அருகில் கொண்டுவரும் போதே அந்த தந்தை அழ தொடங்கிவிடுகிறார்.
பிறகு குழந்தையின் கையில் ஊசி போடப்பட்ட நிலையில், குழந்தை துடித்து அழுவதைக் கண்டு அவர் கதறி கதறி அழுகிறார். குழந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாதவர்போல அவர் குழந்தையை அணைத்துக்கொண்டு அழுகிறார்.
இந்த நிலையில் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.