சுவிஸ்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்!!

190

சுவிஸ்லாந்தில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அஸ்வின் பாலரூபன் என்ற இளைஞர் இவ்வாறு கால்பந்தாட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் செலென்ஜ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கழகத்தின் சார்பில் அஸ்வின் விளையாடி வருகின்றார்.

ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கால்பந்தாட்டக் கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அணியின் வெற்றிக்காக அஸ்வின் வழங்கிய பங்களிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வரும் அஸ்வினுக்கு சமூக ஊடகங்களில் பெருமளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் சுவிஸ்லாந்தில் இடம்பெற்று வரும் பல்வேறு கழக மட்டப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.