வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!!

437

மொனராகலை – கதிர்காமம் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று (30.05.2025) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனதெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.