முச்சக்கரவண்டி சாரதியை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட இளம்பெண், அவரை செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பெண்னும் கணவரும் முச்சக்கரவண்டி சாரதியின் கால்களை பிடித்த் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இந்தியாவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் பெங்களூரு பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது முச்சக்கரவண்டி உரசியதால் இளம்பெண் ஆத்திரமடைந்தார்.
இந்தி மொழியில் முச்சக்கரவண்டி சாரதியை இளம்பெண் திட்டியதுடன் தனது செருப்பால் சாரதியை தாக்கியுள்ளார். இதை முச்சக்கரவண்டி சாரதி தனது கையடக்க தொலைபேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அதோடு முச்சக்கரவண்டி சாரதி கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைவாக வடமாநில பெண் மீது தான் தவறு உள்ளது என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்த பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து வடமாநில பெண்ணும் அவரது கணவரும் ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.