கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பிராய் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன், ஸ்தலத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில், 28 வயதான கந்தசாமி பிரணவன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.
தம்பிராய் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இளைஞன் மீது, இனந்தெரியாத நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்