இந்த விமானம் இன்று (04.06.2025) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330-200 ஜூன் 4 ஆம் தேதி காலை 8:15 மணி முதல் 9:30 மணி வரை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து பாணந்துறை வரை வானத்தில் தாழ்வாகப் பறந்தது,
இதேவேளை, இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.