கிளிநொச்சி பூநகரி பிரதெசத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி உயிரிழந்துள்ளார். உயர்தரத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கிளி முழங்காவில் தேசிய பாடசாலையில் இரண்டாம் வருட மாணவியாக கல்வியினை தொடர்ந்து வந்த பூநகரி இரணைமாதா நகரினை பிறப்பிடமாக கொண்ட மாணவி நேற்றைய தினம் உடல்நல குறைவால் மரணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் மரணம் உறவுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.