பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் ஓடிக் கொண்டிருந்த அதிசொகுசு கார், திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று காலை 9.15 மணியளவில், மரைன் டிரைவ் வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு படையினர் அத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் பம்பலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.






