வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை நேசிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கும் எனும் தொனிப்பொருளில் இன்று (05.06.2025) காலை மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.
நெளுக்குளம் கிராம சேவையாளர் கௌசல்யா லெனின் தலைமையில் இடம்பெற்ற இம் மரநடுகையானது நெளுக்குளம் பிள்ளையார் ஆலய வளாகம், நெளுக்குளம் தொடக்கம் குழுமாட்டுச்சந்தி வரையிலான வீதியோரம் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர், வனவளத் துறையினர், தொழிநுட்ப கல்லூரி அதிபர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நெளுக்குளம் பொலிஸார்,
நிர்வாக கிராம அலுவலர், சமூர்த்தி அலுவலர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், அரச மற்றும் அரசார்பற்ற ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்குபற்றியதுடன் மரநடுகையிலும் ஈடுபட்டிருந்தனர்.
நெளுக்குளம் கிராம சேவையாளரினால் முன்னெடுக்கப்படும் இம் மரநாடுகையானது பல்வேறு கட்டங்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.