ஏரியில் குளிக்க சென்ற பெண்கள் உள்ளிட்ட நால்வர் பரிதாபமாக பலி!!

559

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலாஎல்ல ஏரியில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் அப் பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.