வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய இரத உற்சவம்!!

3050

வவுனியா – குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் இன்று (09.06.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பக்தர்கள் சூழ இன்று காலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து காளி அம்பாள் உள்வீதி வலம் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன்போது, அடியார்கள் அங்கபிரதட்சனை, காவடிகள் மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.

இதேவேளை, காலை 10.30 மணியளவில் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது.