முல்லைத்தீவு – வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞரொருவர் விபத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்திற்கு உள்ளாகி வாய்க்காலொன்றுக்குள் விழுந்துள்ளார்.
நித்திரை கலக்கம் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.