பாடசாலையில் முறிந்து விழுந்த மரம் : ஒரு மாணவன் பலி – 17 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

1180

பலாங்கொடை, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் இன்று (12) வீசிய காற்றின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 17 மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.