விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி : 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி?

760

அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்திருக்கும் நிலையில் அவர் 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்துள்ளார்.

நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

விமானமானது மொத்தம் 242 பேரை ஏற்றிச் சென்ற நிலையில், 241 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஸ் குமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

அதற்கு காரணம் அவர் அமர்ந்திருந்த 11ஏ இருக்கை தான். இந்த இருக்கையானது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் உயர்தர வகுப்புக்கு அடுத்து ஜன்னலுக்கு அருகில் இருக்கும்.

இந்த இருக்கைக்கு இடைவெளி அதிகமாக இருக்கும். மேலும், அவசர கதவுக்கு அருகே இறக்கைக்கு பக்கத்தில் இருக்கும்.

இது விமானத்தின் பலமான பகுதியாக இருப்பதால் விபத்து நடைபெறும் போது இந்த இருக்கையில் இருப்பவர்கள் மட்டும் விரைவில் தப்புவதாக நம்புகிறார்கள்.

நிபுணர்களின் கருத்துப்படி, அவரச கதவுக்கு பக்கத்தில் இருக்கும் 5 இருக்கைகள் மிகவும் பாதுகாப்பானவை. ஏனென்றால், அவசரம் என்றால் உடனே வெளியேற முடியும்.

விமான விபத்தை பொறுத்தவரை உயிர் பிழைப்பது என்பது விபத்தை பொறுத்து தானே தவிர, இருக்கையை வைத்து அல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, 11ஏ இருக்கை இறக்கை பகுதி பலமாக இருந்ததால் சேதமடையாமல் உடைந்திருக்கிறது. அதன் வழியாக அவர் குதித்துள்ளார்.