நீர்கொழும்பு – கொச்சிக்கடை, கம்மல்துறை கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை முச்சக்கரவண்டியுடன் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் நீர்கொழும்பு தழுபத பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் மற்றும் கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.