மீண்டும் மிகக் கேவலமாக 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்த இந்திய அணி!!

259

Eng

இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கம்பீர், முரளி விஜய் களமிறங்கினர். அண்டர்சன் வீசிய முதல் பந்திலே ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் கம்பீர் வெளியேறினார். தொடர்ந்து இந்திய வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாது திணறினர்.

முரளி விஜய் 18 ஓட்டங்களையும், டோனி 82 ஓட்டங்களையும், அஸ்வின் 13 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர். இவர்கள் தவிர மற்றைய 8 வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்திய அணி 148 ஓட்டங்களுக்கு பரிதாபமாக அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜோர்டன் மற்றும் வோகேஸ் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட முடிவில் விக்கெட் இழப்பின்றி 62 ஓட்டங்களை பெற்றுள்ளது.