500 பெண்களுடன் பால் குடம் சுமந்த வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர!!

560

Daya

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, 500 பெண்கள் கலந்து கொண்ட பால் குட பவனியில் இணைந்து தானும் பால் குடம் சுமந்துள்ளார்.

குருணாகல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இந்த பால் குட பவனி இடம்பெற்றது. நாட்டுக்கு நலன் வேண்டி இந்த பால் குட பவனியும் பூஜையும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, வேட்டி, தலைபாகை அணிந்து பால் குடம் சுமந்து சென்று, அதனை ஆலயத்தின் பிரதம குருக்கள் கெங்கா ரவிச்சந்திர குருக்களிடம் கையளித்தார். இதனயடுத்து முதலமைச்சருக்கு ஆசி வேண்டி பூஜை நடத்தப்பட்டது.

முருக பெருமானுக்கு பால் குடம் சுமந்த தயாசிறி ஜயசேகர இன்று முதல் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவான பிரசாரங்களை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.