மெதுவாக சாப்பிட்ட 3 வயதுக் குழந்தையை அடித்தே கொலை செய்த பெற்றோர்!!

765

அமெரிக்காவில் நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் ஒரு தம்பதி தங்களுடைய குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடினர்.

அமெரிக்காவில் வசித்து வந்த ஜான்சன் ரேமண்ட் தம்பதியினர் அவர்களுடைய 3 வயது மகள் விமானத்தில் ஏறும்போது தவறி விழுந்ததாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை மெதுவாக சாப்பிட்ட காரணத்திற்காக பெற்றோர் அடித்துக் கொலை செய்துவிட்டு தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது.

அந்த குழந்தையுடன் விளையாடிய மற்ற குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அந்த தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.