பேரூந்து – லொறி மோதி விபத்து : பலர் காயம்!!

919

இரத்தினபுரி – அவிசாவளை வீதியில் எஹெலியகொடை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (18.06.2025) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் லொறியின் சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.