பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

1151

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவனின் மரணம் தொடர்பான தகவலை குற்றப் புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.

குறித்த மாணவன் துன்புறுத்தல் காரணமாகவே வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக குற்றப் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம் காரணமாக மாணவன் உயிரிழக்கவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் நடைபெறும் துன்புறுத்தல் தொடர்பான விடயங்களை வெளியே வெளிப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட சரித் தில்ஷான் என்ற மாணவன், சம்பவத்திற்கு முந்தைய இரவு முழுவதும் துன்புறுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நேற்று முன்தினம் விசாரிக்கவும் நீதிமன்றம் முடிவு செய்தது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை மேலும் விளக்கமறியலில் வைக்க பலாங்கொட நீதிமன்றம் உத்தரவிட்டது.