குருணாகலில் எஹெட்டுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (19.06.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருணாகல் – மொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் எஹெட்டுவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.