இலங்கை அணி அபாரம் சதமடித்த மஹேல, தரங்க ஜோடி..

451

mahela

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மஹேல ஜெயவர்த்தன, ஒருநாள் போட்டிகளில் தனது 16 வது சதத்தை இன்று பெற்றுக் கொண்டார். இவர் 107 ஓட்டங்களைப் பெற்றவேளை அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அத்துடன் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்கவும் இந்தப் போட்டியில் தனது 13 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க ஆட்டமிழக்காது 159 பந்துகளில் 19 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதுவே இவர் பெற்ற அதிக ஓட்டங்களாகும்.

இன்றைய போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 1 விக்கெட்டை மாதிரம் இழந்து 348 ஓட்டங்களை பெற்று புதிய சாதனை படைத்தது.