கடந்த ஆறுமாத காலப்பகுதிக்குள் வாகன விபத்துக்கள் காரணமாக சுமார் 2000பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக குறித்த காலப்பகுதியில் 7152 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலான விபத்துக்கள் சாரதிகளின் அலட்சியம் காரணமாகவே நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று போக்குவரத்துக்குப் பொருத்தமற்ற வாகனங்களில் பயணிப்பதும் விபத்துக்களை ஏற்படுத்தும் இன்னொரு முக்கிய காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.