குஜராத் மாநிலம் காந்திநகரில், தன்னிடம் நெருங்கிப் பழகிய தொழிலதிபரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலமான கிர்தி படேல் என்பவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
சுமார் 13 லட்சம் பாலோயர்களைக் கொண்ட கிர்தி படேல், டிக்டொக் செயலி பயன்பாட்டில் இருந்த காலத்திலேயே, ஆந்தையை கையில் ஏந்தி வீடியோ வெளியிட்டு வனத்துறையிடம் ரூ.25,000 அபராதம் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் இன்ஸ்டா பிரபலம் கிர்தி படேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.