யாழ்ப்பாணத்தில் மினி சூறாவளி : தூக்கி எறியப்பட்ட கதிரைகள்!!

297

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.06) அன்று மாலை திடீரென கடும் காற்றுட ன் மினி சூறாவளி வீசியது. இதன்போது பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுந்ததுடன், மின்சாரமும் சில இடங்களில் தடைப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் பெரும் சிரமங்களையும் பாதிப்புகளையும் எதிர்கொண்டனர். அதேவேளை தென்னிந்திய பிரபலங்களின் இசை நிகழ்ச்சியும் (22) மினி சுறாவளியால் இடை நிறுத்தப்பட்டது.

இசை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக , மங்கள விளக்கேற்றும் வேளை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால் , நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த கதிரைகள் அருகில் இருந்த பந்தல்களின் தகரங்கள் என்பன காற்றினால் தூக்கி வீசப்பட்டமையால் , பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.