கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!!

436

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி அங்குள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், +9471182587 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.