வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் : பயணிகள் விசனம்!!

177

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்ளூர் சேவை கட்டிடத்திலுள்ள இருக்கைகள் பயணிகள் அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அதில் அமருவோர் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும், இருக்கைகளில் இருந்து விழ வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

பேரூந்து நிலையத்தின் மாகாணக்களுக்கிடையிலான கட்டிடத்தின் பயணிகள் அமரும் இருக்கைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதிதாக மாற்றப்பட்ட போதிலும் உள்ளூர் சேவை கட்டிடத்தின் பயணிகள் இருக்கைகள் நீண்டகாலமாக மாற்றப்பட்டவில்லை.

எனவே உரிய அதிகாரிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழுள்ள வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினை துரித கதியில் புணரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாணத்தின் பிரதான நுழைவாயிலாகவும், பல மாவட்டங்களில் வந்து செல்வோர் அதிகமாக கூடும் இடமாகவும் உள்ள பிரதான பேரூந்து நிலையத்தின் இருக்கைகளே இவ்வாறு உடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.