கிளிநொச்சியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒருவர் திங்கட்கிழமை (23.06) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரும் அவரது நண்பரும் கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது 54ஆம் கட்டையடியில் எரிவவாயு சிலிண்டர் ஏற்றிவந்த வாகனத்துடன் மோதி படுகாயமடைந்தார்.
இந்நிலையில் அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (22) யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (22) உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.