நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் சமர்செட் பகுதியில், தேயிலை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (25.06) இரவு இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா ஒலிபண்ட் தோட்டத்திலிருந்து நானுஓயா சமர்செட் தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை ஏற்றிச் சென்ற லொறி, வீதியை விட்டு விலகி தேயிலையுடன் சறுக்கி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த இருவரும், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான லொறி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.