மாவனல்லையில் மற்றுமொரு கோர விபத்து இருவர் காயம்!!

194

மாவனல்லைப் பிரதேசத்தில் மற்றுமொரு பேருந்து – லொறி விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, கொழும்பு – கண்டி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொழும்பில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து வண்டியொன்றும், மாவனல்லையில் இருந்து கேகாலை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் பயணித்த திப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று அதிகாலை மாவனல்லை பிரதேசத்தில் இரண்டு லொறிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.