
வவுனியா பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று (30.06.2025) காலை 8 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வீட்டிலுள்ள சுவாமி அறையிலுள் விளக்கு ஏற்றுவதற்காக விளக்கினுள் தேங்காய் எண்ணெய் என நினைத்து வீட்டில் பிரிதொரு காணில் சேமித்து வைத்திருந்த பெற்றோலை ஊற்றியமையினால் வீட்டில் சுவாமி அறையில் தீப்பற்ற ஆரம்பித்தமையுடன் தீப்பரவல் வீடு முழுவதும் பரவத் தொடங்கியது.

உடனடியாக விரைந்த மாநகர தீயணைப்பு பிரிவினர் பொதுமக்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் சில பொருட்களும் தீயில் கருகி நாசமாகியிருந்தன.

சம்பவ இடத்திற்கு மாநகரசபை முதல்வர், துணை முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.






