யாழ் மாணவனின் வியத்தகு கண்டுபிடிப்பு : பார்வை அற்றவர்களிற்கு வாழ்வு!!

250

யாழில் பாடசாலை மாணவன் ஒருவர் செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான இலத்திரனியல் கருவியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம்- சுழிபுரம் விக்டோரியா கல்லுரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் ஜஸ்மினன் என்ற மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற புத்தாக்க போட்டியில் சமர்ப்பிப்பதற்கான மாணவன் இந்த கருவியை உருவாக்கியுள்ளார்.

அத்தோடு, செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கு இந்த கருவி பயன்படும் முறையில் அமைப்பதற்கு உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ,இந்த இலத்திரனியல் சாதனத்தை சரியாக செய்து முடித்து தமது பாவனைக்கு கையளிக்குமாறும் அதற்கான ஒத்துழைப்புக்களை தாம் வழங்குவதாகவும் விழிப்புணர்வற்றோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்.