மீனவரின் வலையில் சிக்கிய ஆபத்தான பொருளால் பரபரப்பு!!

719

மஹியங்கனை , மாபாகட வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் T-56 துப்பாக்கியொன்று இன்று (01) சிக்கியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.