வவுனியாவில் விவசாயத்தை மேம்படுத்தல் தொடர்பில் பிரதி அமைச்சர்கள் தலைமையில் விசேட கூட்டம்!!

129

வவுனியா மாவட்டத்தின் விவசாய மேம்படுத்தல் தொடர்பிலான விசேட கூட்டம் காணி மற்றும் நீர்ப்பாசன வளங்கள் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (01.07.2025) காலை 9.30 மணி தொடக்கம் 12.30மணி வரை இடம்பெற்றது.

காணி மற்றும் விவசாயம் மேம்படுத்தல், புதிய திட்டங்களை அமுல்படுத்தல், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், குளத்தின் கீழுள்ள வனத்துறையினரின் கட்டுப்பாட்டினுள் உள்ள காணிகளை விடுவித்தல், நவீன தொழிநுட்பம், உரம் தொடர்பான பிரச்சனை என பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர உட்பட பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.