இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து விபத்து : 15 பேர் காயம்!!

463

கண்டி, வத்தேகம, அரலிய உயன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (03.07.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகமவிலிருந்து குடுகல நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 15 பேர் காயமடைந்து வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.