பேருந்திலிருந்து விழுந்த பாடசாலை மாணவன் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை!!

315

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (03.07.2025) இடம்பெற்றுள்ளது. பேருந்து பயணித்துக்கொண்டிருக்கும் போது மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்தவுடன் பேருந்து நிறுத்தப்படுகின்றது.

அதன்போது அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மாணவனை தூக்குகின்றார்கள். இந்தநிலையில்,இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.